tamilnadu

தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு செவ்வஞ்சலி

மார்க்சிய விஞ்ஞானத்தை - எங்களுக்கு போதித்த மெய்ஞ்ஞானியே

அறிவின் அளப்பறிய ஆற்றலால் - எங்கள் சிந்தனையில் ஒளியேற்றிய சுடரொளியே

 போர்க்கள வீரனுக்கு அறிவே ஆயுதமென எங்கள் நெஞ்சினிலே அறிவு விதையை விதைத்தீரே!

 கதறி அழுகின்றனர் கடைக்கோடி மக்கள் அவர்களின் கண்ணீரை துடைத்தெறிய அறிவெனும் ஆயுதம் தாங்கி அங்கே செல் என்றீரே!

 மதம் எனும் பெயர் கொண்டு மனிதம் மாய்க்கப்படுகிறதே வேடிக்கை மனிதனாய் நில்லாமல் மனிதம் காக்க வீறுகொண்டு அங்கே செல் என்றீரே!  

நவரத்தின நிறுவனங்கள் நசுக்கப்படுகிறதே - நம் நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகிறதே

நசுக்கப்படும்துறைகாத்து நாட்டின் நலன் காக்க ஏந்தி நில் செங்கொடியை என்று தான் சொன்னீரே!  

தீண்டாமையெனும் கொடுந்தீயால் தீட்டென ஒதுக்கப்படும் தீமைகளை அழித்தொழிக்க தீரமிக்க வீரனாய் திரண்டெழு என்றீரே!  

தொழிலாளர்களை நேசிக்கும் தொழிற்சங்க தலைவராய் மக்களை நேசிக்கும் மக்கள் தலைவராய் தமிழகத்தில் தடம்பதித்த எங்கள் தோழரே

உங்கள் பிரிவால் - மீளாத்துயரால் துவண்டு போனது தொழிலாளி வர்க்கம் உங்களுக்கு எங்கள் கண்ணீர் மல்க செவ்வஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.

 எம்.ராஜசேகரன் போக்குவரத்து ஆய்வாளர் (ஓய்வு) TNSTC - கோவை

 

;