ஈரோடு, மார்ச் 13- ஈரோடு மாவட்டம், டீச்சர்ஸ் காலனி அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்மாற்றி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் இருந்து கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகிலுள்ள மின்மாற்றி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத் தால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், அருகில் இருந்த இரண்டு ஆட்டோக்களும் சேதமடைந்த நிலையில், லாரி ஓட்டுநரும், ஆட்டோ ஓட்டுநரும் உயிர் தப்பினர். இதனைத்தொடர்ந்து தக வலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.