tamilnadu

img

ரயில், பேருந்து சேவை துவங்கியது

கோவை, ஜூன் 1 - கொரோனா ஊரடங்கு காரண மாக நிறுத்தி வைக்கபட்டிருந்த ரயில் மற்றும் பேருந்து சேவை திங்க ளன்று துவங்கியது. கொரோனா ஊரடங்கு காரண மாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த பொது மக்களுக்கான ரயில் சேவையை சில தளர்வுகளுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனடிப்படை யில் கோவை ரயில் நிலையத்திலி ருந்து காட்பாடி பகுதிக்கு முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. கோவை யில், காலை 6.15 மணியளவில் புறப் பட்ட இந்த ரயில் ஈரோடு, சேலம் வழியாக காட்பாடி சென்றடைகி றது. இதில் பயணம் செய்ய கோவை யில் 183 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 117 பயணிகளின் வருகை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து காலை 7.10 மணியள வில் கோவையிலிருந்து திருச்சி வழி யாக செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் இயக்கப்பட்டது. முன்னதாக ரயில் நிலையத்திற்கு வரும் பயணி கள் வெப்பமாணி கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கபட்டனர்.
பேருந்து சேவை 
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள், ஒன்றாவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. கோவை கோட்டத்துக்கு உட் பட்ட பகுதிகளான கோவையில் 539 பேருந்துகள், திருப்பூரில் 280, ஈரோட்டில் 334, நீலகிரியில் 173 என 1,326 பேருந்துகள் திங் கள் முதல் இயக்கப்பட்டன. முக கவசம் அணிந்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும், சமூக இடைவெளி அவசியம் என்பன உள்ளிட்ட, அரசின் வழி காட்டு நடைமுறைகளைக் போக்கு வரத்து ஊழியர்கள் பின்பற்றினர். ஒரு பேருந்தில் 31 பயணிகளுடனும், 22 பயணிகளுடன் உள்ளூர் பேருந் துகளும் இயக்கப்பட்டது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பரி சோதனை செய்வதுடன், முககவ சம் கையுறை அணிவதும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.  மேலும், பயணிகளுக்கு கிருமி நாசினி தெளிக்க, வெப்பநிலையை சோதனை செய்ய, தனி நபர் நியமிக் கப்பட்டுள்ளார். இதேபோல் பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தத்திலும், பணி மனைகளிலும் கிருமிநாசினி தெளிக் கப்பட்ட பிறகே பேருந்துகள் இயக் கப்படுகிறது.
சேலம்
இதேபோல், சேலம் மாநகரத் தில் 263 பேருந்துகளும், புறநகரில் 135 பேருந்துகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்ற வேண் டும் என்பதை வலியுறுத்தும் வித மாக ஒலிபெருக்கிகள் மூலம் அறி விக்கப்பட்டது.