tamilnadu

img

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

தருமபுரி, செப்.4-  அரூரை அடுத்த எல்லப் புடையாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திரு விழா நடைபெற்றது. உணவுத் திருவிழா வினை பள்ளியின் தலைமை ஆசிரியை கே. செல்வராணி தொடக்கி வைத்தார். விழாவில், நமது  முன்னோர்கள்பயன் படுத்திய பாரம்பரிய உணவு  வகைகள், சிறு தானியங் களால் செய்யப்பட்ட உணவு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு  வகைகளை சமைத்து பள்ளி மாணவர் களுக்கு வழங்கப்பட்டன. சிறு தானியங் களின் பயன்பாடுகள், நமது முன்னோர் பயன்படுத்திய உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் கருத்து ரைகளை வழங்கினர். இதில், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பி.எட் மாணவ ஆசிரி யர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.  

;