சாலை விபத்தில் இருவர் பலி
அவிநாசி, ஜூன் 30- அவிநாசி புறவழிச் சாலையில் சனியன்று ஏற் பட்ட விபத்தில் இரு கல் லூரி மாணவர்கள் பலியா கினர். பாண்டிச்சேரியில் உள்ள ரங்காரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த முருகையன் மகன் ராகவன் (21). அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல் முருகன் (20). இவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் இரண் டாமாண்டு இளங்கலை அறிவியல் படித்து வரு கின்றனர். அதேபகுதியை சேர்ந்த உடன் படிக்கும் 12 மாணவர்கள் 6 இரு சக்கர வாகனங்களில் உதகைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது சனியன்று காலை அவிநாசி புறவழிச் சாலை திருப்பூர் பிரிவு பாலத்தில் வரும் போது ராகவன் மற்றும் வேல் முருகன் இருவரும் வந்த இருசக்கர வாகனம் கட்டுப் பாட்டை இழந்து சாலை யோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள் ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்
அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி இருவர் பலி
திருப்பூர், ஜூன் 30 – குடிபோதையில் சொகுசுக்காரை தாறுமாறாக ஓட்டி வந்த இளைஞர் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி யதில் தொழிலாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஊத்துக்குளி, குன்னத்தூர் சாலைப் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துநாயகம் (60). பனியன் தொழிலாளி. இவர் சனிக்கிழமை இரவு, அவிநாசி அருகே தெக்கலூரில் இருந்து ஊத்துக்குளியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப் போது அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி அதி வேகத்தில் தாறுமாறாக வந்த சொகுசுக் கார் ஒன்று அவி நாசிலிங்கம்பாளையம் அருகே முத்துநாயகத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காய மடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மீது மோதிய அதே சொகுசுக் கார் அங்கு நிற்காமல் விரைந்து சென்று அந்த வழியாக சாலையோரம் நடந்து சென்ற அவிநாசிலிங்கம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மருதாசலம் (50) என்பவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காய மடைந்த மருதாசலம் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரி ழந்தார். விபத்து ஏற்படுத்து விட்டு, நிற்காமல் சென்ற சொகுசு காரைப் பொதுமக்கள் அணைப்புதூர் அருகே துரத்திப் பிடித்தனர். இதில் காரை ஓட்டி வந்தவர் அணைப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் லஷ்மண் என்பவரது மகன் விபின் (29) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது அருந்தி போதையில் அந்த காரை ஓட்டி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.