திருப்பூர், ஜூலை 11 – பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் தேங்கிக் கிடக்கும் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க வலியு றுத்தி அப்பகுதி பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். பெருமாநல்லூர் நால் ரோடு பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொடாரம் பாளையம், ரோஜா கார்டன், சிவ சக்தி நகர், லோட்டஸ் கார்டன், மகா லட்சுமி நகர், சன் சிட்டி, பெருமா நல்லூர் தெற்கு வீதி, காமாட் சியம்மன் கார்டன், ஈ.பி.காலனி, வலசுப்பாளையம், வெல்டன் சிட்டி, கணபதிநகர், கற்பகாம்பாள் நகர், உப்புத் தோட்டம் வீதி, பெருமா நல்லூர் ஆகிய குடியிருப்புப் பகுதி களில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் செப்பனிட்டு புதுப் பிக்க வேண்டும்.
அனைத்துப் பகுதி களுக்கும் முறையான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேட்டைத் தடுக்க வேண்டும். தெரு விளக்குகள் பழு தானதால் இருளில் மூழ்கிக் கிடக்கும் பகுதிகளில் தெரு விளக்கு களைச் சரி செய்வதுடன், தேவைப் படும் பகுதிகளில் புதிதாக தெரு விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோரிக்கை மனுக் கொடுப்பதற்காக, பெண்கள் உள்பட சுமார் நூறு பேர் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் வியாழனன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வருகை தந்தனர். எனினும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையர், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்திற்காக மாவட்ட ஆட்சியரகம் சென்றிருந்தனர். முக்கிய அதிகாரிகள் இல்லாத நிலையில், மனுக் கொடுக்க வந்தி ருந்தவர்கள் நெடு நேரம் காத்திருந் தனர். உயர் அதிகாரிகள் அலுவல கத்துக்கு வந்து கோரிக்கை மனு வைப் பெற்று பிரச்சனைகளைக் கேட்டறிய வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் வராவிட்டால் சாலை மறியல் செய்யப் போவ தாகவும் அவர்கள் கூறினர். அதி காரிகள் உடனடியாக வந்து பிரச்ச னைகளைக் கேட்டறிந்து தீர்க்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன்பாக முழக்கம் எழுப்பினர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக முற்றுகை போராட்டம் தொடர்ந்த நிலையில் ஒன்றிய அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். பெருமா நல்லூரில் நிலவும் மோசமான நிலை குறித்து பெண்கள் கோபாவேச மாக எடுத்துரைத்து பிரச்சனை களைத் தீர்க்க வற்புறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.பி.சாமி நாதன், எஸ்.அப்புசாமி, கிளைச் செயலாளர்கள் கே.ரங்கசாமி, சிவலிங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம், இ.பி.சாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.