திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் மாநகராட்சியின் 2020 - 21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வருமானம் ரூ.1,337 கோடியே 14 லட் சத்து 87 ஆயிரம் எனவும், மொத்த செலவு ரூ.1,331 கோடியே 78 லட் சத்து 25 ஆயிரம் ஆகவும் மதிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரம் உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவல கத்தில் மாநகராட்சி ஆணையர் க. சிவக்குமாரிடம் உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் 2020 - 21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக் கையை சமர்ப்பித்தார். இந்த பட் ஜெட் அறிக்கையின் முக்கிய அம்சங் களைச் சுட்டிக்காட்டி மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் செய்தியா ளர்களிடம் கூறியதாவது, திருப்பூர் மாநகராட்சிக்கு வருவாய் மற்றும் மூல தன வரவு இன வகையில் வருவாய் நிதி ரூ.601 கோடியே 69 லட்சத்து 70 ஆயி ரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் குடிநீர் வடிகால் வகையில் வரு வாய் ரூ.729 கோடியே 36 ஆயிரம் ஆகும். கல்வி நிதி வருவாய் ரூ.6 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரம். இந்த மூன்று இனங்களின் மொத்த வருவாய் ரூ.1337 கோடியே 14 லட்சத்து 87 ஆயி ரம் என உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் வருவாய் மற்றும் மூல தன வகையில் செலவு ரூ.597 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம், குடிநீர் வடிகால் வகையில் செலவு ரூ.728 கோடியே 32 லட்சம், கல்வி நிதி செலவு ரூ.6 கோடியே 42 லட்சம் என மதிப்பிடப்பட் டுள்ளது. மொத்த செலவு ரூ.1331 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாயைக் காட்டிலும் செலவு குறை வாக உள்ளது. உபரி நிதியாக ரூ.5 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரம் வரும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
மிடுக்கான நகரத் திட்டம்
குறிப்பாக அம்ருத் திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் மிடுக்கான நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் ஆகிய பணிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன. மிடுக்கான நகரத் திட்டப் பணிகளை நிறைவேற்றும் தரப்பட்டிய லில் திருப்பூர் மூன்றாவது இடம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிடுக்கான நகரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 28 திட்டப் பணி களில் 24 பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. ராயபுரம், ராய புரம் கிருஷ்ணன் கோவில், புதுநகர் காலனி, ஜெ.ஜெ.நகர் ஆகிய 4 பூங்கா பணிகள் நிறைவடைந்துவிட்டன. இது தவிர பழைய பேருந்து நிலை யத்தை இன்று (புதன்கிழமை) கோயில் வழி தற்காலிகப் பேருந்து நிலையத் திற்கு மாற்றிவிட்டு அங்கு மிடுக்கான நகரத் திட்டப் பணிகளைத் தொடங்க முடிவு செய்திருந்தோம். எனினும் கோவையில் இருந்து அரசுப் போக்கு வரத்து ஆணையர் நேரில் ஆய்வு செய்ய வந்ததால் பணி தொடங்கப்பட வில்லை. விரைவில் இப்பணி தொடங் கப்படும். அதேபோல் தினசரி சந்தையையும் இடமாற்றம் செய்துவிட்டு மிடுக்கான நகரத் திட்டப் பணியை இன்று (புதன்) தொடங்க உத்தேசித்திருந்தோம். இப் பணியும் உடனடியாகத் தொடங்கப் படும். புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் அனைத்து வசதிகளு டன் நவீன முறையில் மாற்றி அமைக் கப்படும். கோயில்வழி தற்காலிகப் பேருந்து நிலையம் நிரந்தர பேருந்து நிலையமாக மாற்றப்படுமா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்.
நான்காவது குடிநீர் திட்டம்
திருப்பூர் நான்காவது குடிநீர் திட் டப் பணிகள் இந்த ஆண்டு 2020 க்குள் 50 சதவிகிதப் பணிகள் நிறைவடை யும். 2022ஆம் ஆண்டு இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும். தற்போது நக ரில் முதலாவது திட்டம் கைவிடப்பட் டுவிட்டது. இரண்டாவது மற்றும் மூன் றாவது குடிநீர் திட்டம் மூலம் 116 எம் எல்டி குடிநீர் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படு கிறது. இதில், இரண்டாவது திட்ட பிர தான குழாயில் பல்வேறு இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அவி நாசி வழியாக வரக்கூடிய 8 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த குழாயில் 3கி.மீட்டர் தூரம் புதுப்பிக்கப்பட்டு விட்டது. 5 கி.மீட்டர் தூரம் குழாயைப் புதுப்பிப்பதற்கு முன்மொழிவு தயா ரித்து அனுப்பப்பட்டுள்ளது. விரை வில் அப்பணி நடைபெறும். அப்போது குடிநீர் குழாய் உடைப்பு, நீர்க்கசிவுப் பிரச்சனை தீரும். இது தவிர 2015 - 16ஆம் நிதியாண் டில் நகரில் 26 புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், 4 தரைமட் டத் தொட்டிகள் மற்றும் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு கூடுதல் கன அள வுள்ள விநியோக குழாய்களை அமைத் தல் ஆகிய பணியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நான்காவது திட்டம் நடை முறைக்கு வரும்போது மக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யும் கால இடை வெளி 3 - 5 நாட்கள் என்பது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது தினமும் குடி நீர் வழங்கும் நிலை உருவாகும்.
பாதாளச் சாக்கடைத் திட்டம்
இத்துடன் அம்ரூத் திட்டத்தில் ரூ. 604கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டப் பணியும் நான்கு பகுதிகளாக நடைபெறுகிறது. ச.பெரி யபாளையம், சின்னாண்டிபாளையத் தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்க ளும் அமைக்கப்படும். மாநகரின் 60 வார்டுகள் மொத்தம் 17 பிராந்தியங்க ளாகப் பிரிக்கப்பட்டு 14 பகுதிகளில் இந்த பாதாளச் சாக்கடை திட்ட கட்டு மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுபட்ட 10, 11, 12ஆவது பிராந் தியங்களுக்கும் பாதாளச் சாக்கடைக் கொண்டு வர விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த பணியும் விரைவில் நடைபெ றும். இதன் மூலம் மாநகரில் 74 ஆயி ரத்து 860 வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் கொடுக் கப்பட்டு கழிவுநீரைச் சேகரித்து சுத்தி கரிக்கப்படும். இப்பணி 2022ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.
திடக்கழிவு மேலாண்மை
திருப்பூரில் 28 இடங்களில் உள்ள வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஈரமான கழிவுகள், உலர் கழிவுகள் என பிரிக்கும் திடக்க ழிவு மேலாண்மைக் கூடங்கள் அமைக் கப்படும். ஈரக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிக ளுக்கு வழங்கப்படும். உலர் கழிவு களை சேகரிக்கும் துப்புரவுப் பணியா ளர்களே அதை விற்று காசாக்கிக் கொள்ளலாம். இது தவிர சிமெண்ட் ஆலைகளுக்கு அந்த உலர் கழிவு களை அனுப்புவோம். இ வேஸ்ட் எனப்படும் மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்கு தனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது. முன்னதாக, நகரில் குப்பை அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி யிருக்கும் நிலை குறித்து செய்தியாளர் கள் கேட்டபோது, திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு இந்நிலை மாறும் என்று ஆணையர் க.சிவக்குமார் கூறி னார். மேலும், அடிப்படை வசதிகள், கட்டமைப்புப் பணிகள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. இப்பணி கள் முடிவடைந்து பொது மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என் றும் தெரிவித்தார். இதில், மாநகராட்சிப் பொறியாளர் ஜி.ரவி, செயற்பொறியாளர் சபி யுல்லா, உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன், உதவி ஆணை யர் (வருவாய்) தங்கவேல் ராஜன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.