திருப்பூர், பிப். 14- இடுவாய் ஊராட்சியில் பொது மக்களுக்கு குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கும் முறை குறித்து குடிநீர் ஆய்வு விளக்கக் கூட்டம் இடுவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மருத்துவர் வேல்முருகன் மற்றும் நல அலுவலர் சிவநாதன், துணைத் தலைவர் சு.பரமசிவம் ஆகியோ ரும், குடிநீர் விநியோகம் செய்யும் வாட்டர் மேன்களும் கலந்து கொண்டனர்.