tamilnadu

img

திருப்பூர்: செந்தொண்டர் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், செப். 9 – திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  சார்பில் செந்தொண்டர் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் திங்களன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார். இதில் செந்தொண்டர் அணி பணிகள் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி உரையாற்றினார். செந் தொண்டர் வரலாற்று பாத்திரம் தொடர்பாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட செந் தொண்டர் அணியினர் இக்கூட்டத் தில் பங்கேற்றனர்.