tamilnadu

img

வெறிச்சோடிய உதகை திபெத்தியன் மார்க்கெட்

உதகை, மார்ச் 20- உதகையில் சுற்றுலா பயணிகளின் வணிக வளாக மாக உள்ள திபெத்தியன் மார்க்கெட் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில்  திபெத்தியன் மார்க்கெட்  வணிக வளாகம் உள்ளது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணி கள் ஏராளமானோர் இந்த வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை  வெகுவாக குறைந்து அனைத்தும் பகுதிகளும் வெறிச் சோடி காணப்பட்டது.  இந்நிலையில், பொருட்கள் வாங்க சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் தாவரவியல் பூங்கா அருகில் உள்ள  திபெத்தியன் மார்க்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.