மேட்டுப்பாளையம், ஆக. 27- வன விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி குண்டு தயாரித்த மூன்று பேரை வனத் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் வனத்தை ஒட்டியுள்ள கல்லார் என்னு மிடத்தில் கடந்த ஆக. 15ஆம் தேதியன்று வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப் பட்டிருந்த அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை கடித்து மாடு ஒன்று வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. கோவை வனக்கோட்ட பகுதியில் இது போன்ற சம்ப வங்கள் அடிக்கடி நடப்பதால், வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு செல் லும் கால்நடைகள் மட்டுமின்றி யானைகள் உள்பட பல்வேறு வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கல்லார் பகுதியில் காட் டுப்பன்றி அல்லது காட்டெருதை கொல் லும் நோக்கில் நாட்டு வெடி வைத்து மாடு பலியான வழக்கில் மேட்டுபாளையத்தை சேர்ந்த குணசேகரன், ஸ்ரீகாந்த், கிருஷ்ணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய் துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து இரண்டு நாட்டு வெடிகளையும் பறி முதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட் டுள்ள நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஐந்து பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.