tamilnadu

img

கொலை மிரட்டல்: விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி 5 பேர் மீது வழக்கு பதிவு

கோவை, ஆக.18- கோவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகியின் காரை அடித்து உடைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்ற அதே அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.  கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம், பாலாஜி நகர் பகுதியில் குடியி ருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் மாவட்ட துணைத்தலைவராக உள்ளார்.  இந்நிலை யில் கடந்த வாரம் கிருஷ்ணர் ஜெயந்தி விழா விற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டிஸில் பெயர் விடுபட்டது மற்றும் பணம் வசூ லித்து தொடர்பாக அதே அமைப்பைச் சேர்ந்த இடிகரை குணசேகரன் என்ப வர் செல்போனில் மிரட்டியதாக கூறப்படுகி றது.

இந்நிலையில், குணசேகரனின் தூண்டு தலின்பேரில் மோகன், சரவணன், செல் வம், செந்தில் உள்ளிட்ட 4 பேர் சனியன்று ராமகிருஷ்ணன் வீட்டிற்கு  வந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், கீழே நின்றிருந்த அவரது காரை இரும்பு கம்பி யால் தாக்கி கண்ணாடியை உடைத்துச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து பெரியநாயக்கன்பாளை யம் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலை மறைவாக உள்ள 5 பேரையும் தேடிவரு கின்றனர்.