பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி எம்.பியிடம்., வங்கித்துறையினர் மனு
கோவை, பிப். 27 - முப்பது மாத காலமாக நடை பெற்று வரும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இப்பிரச்சனையை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகள் வியாழனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் மனு அளித்த னர். கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர். நடராஜனை கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத் தின் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதா வது வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிக ளுக்கு சிறப்பு ஊதியத்தை அடிப் படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரம் ஐந்து நாள் வேலை, அதிகாரிகளுக்கு வரைய றுக்கப்பட்ட வேலை நேரம், குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், 2017 நவம்பர் 1ஆம் தேதியன்றே புதிய ஊதியம் அமலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முப்பது மாத காலமாக ஊதிய உயர்வே அளிக்கப்படாமல் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது. நியாயமான ஊதிய உயர்வை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றப்பட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனு வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இச்சங்க நிர்வாகி கள் கூறுகையில், வங்கி அதிகாரி கள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அறைகூவ லின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் பிரதமர் கவனத் திற்கு கொண்டு செல்ல மனு அளிக் கப்பட்டு வருகிறது. அந்த வகை யில் கோவை நாடாளுமன்ற உறுப் பினரிடம் வங்கித்துறையினர் கோரிக்கை மனுவை அளித்துள் ளோம் என்றனர். முன்னதாக, இந்த சந்திப்பில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.மீனாட்சி சுப்பிரமணியம், எம்.வி.ராஜன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தின் மகேஷ்வரன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகி முருகேசன், சுப்பிரமணி யம், அகில இந்திய வங்கி அதிகாரி கள் சங்கம் சசிதரன், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரசின் வேத ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.