tamilnadu

img

ஊற்று நீர் கிணற்றில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுகிறது.

கோவை கீரணத்தம் ஊராட்சிக்குட்பட்ட காரக்குட்டை மற்றும் ஊற்று நீர் கிணற்றில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள சூழலில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இதுகுறித்து  ஊராட்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.