tamilnadu

வழிப்பறியில் ஈடுபட்ட விஎச்பி அமைப்பினர்

கோவை, அக். 30 - கோவை இடிகரையில் வடமாநிலத் தொழிலாளர்களை வழிமறித்து செல்போன் உள்ளிட்டவற்றைக் பறித்துச் சென்ற விஎச்பி அமைப்பைச் சார்ந்தோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோவை, இடிகரையில் உள்ள சிவசக்தி கோர் கம்பெனி யில் பிரபாகரன் மற்றும் அஜய்குமார் என்கிற வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், வியாழனன்று இரவு பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழி யில் விஸ்வ ஹித்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் இவர்களை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை மிரட்டிப் பிடுங்கிய விஎச்பி-யினர் தொடர்ந்து அத்தொழிலாளர்களைத் தாக்கியதாகத் தெரி கிறது. இதனைக் கண்ட அப்பகுதிப் பொதுமக்கள் அவர் களை பிடிக்க முற்பட்டபோது, அக்கும்பல் அங்கிருந்து தப்பி யோடியது.  

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரித்ததில், இதுபோன்று வடமாநிலத் தொழிலாளர்களிடம் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் விஎச்பி அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும், இதுதொடர்பாக புகாரளிக்க வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலோர் தயங்குவதால், இவர் களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவது வாடிக்கை யாக இருந்து வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில், இத்தகைய வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியோடிய விஎச்பி-யினரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வரு கின்றனர்.