கோவை, மே 31- கோவையில் அருகே திருடு போன தனது இருசக்கர வாகனம் கொரியரில் வந்ததால் வாகன உரிமையாளர் இன்ப அதிர்ச்சி யடைந்தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே யுள்ள பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுரேஷ். இவர் லேத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுதொடர்பாக சுரேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அப்பகுதி யில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றும் பிரசாந்த் என்பவர் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலை யில் சனியன்று கொரியர் அலுவலகத்தில் இருந்து கொரியர் வந்திருப்பதாக சுரே ஷிற்கு அழைப்பு வந்துள்ளது. இதைய டுத்து கொரியர் அலுவலகம் சென்று பார்த்த போது, தனது இரு சக்கர வாகனம் கொரி யரில் வந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். பிரசாந்த் மயிலாடுதுறையில் இருந்து சுரேஷ்க்கு இரு சக்கர வாகனத்தை கொரியரில் அனுப்பியுள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் சொந்த ஊர் செல்வதற்கு வழியில்லாமல் இரு சக்கர வாகனத்தை திருடி (எடுத்து) சென்றுள்ளார். இதனைய டுத்து அங்கிருந்து வாகன ஊரிமையாளரின் விலாசத்திற்கே திருப்பி அனுப்பியது தெரி யவந்துள்ளது. இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.