கோவை, ஜூலை 12- கோவை குற்றால அருவியில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டம், சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து நின்றது. இதனைய டுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல கடந்த மார்ச் 26 ஆம் தேதி வனத்துறையினர் தடை விதித்த னர். நீர் இல்லாததாலும், வனவிலங்கு கள் நீர் தேடி அருவி பகுதிக்கு வரும் என்பதாலும் சுற்றுலாவாசிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாக வனத்துறை யினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக் கும் மேலாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள் ளது. கடந்த சில நாட்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. தற்போது வெள்ளப்பெருக்கு இல்லாத காரணத்தால் வெள்ளிக் கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தடை காலத்தில் கோவை குற்றால அருவி யில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. மூன்று மாதங்க ளுக்குப் பிறகுகோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளா பகுதி களில் இருந்தும் அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகக் குளித்து மகிழ்ந்தனர்.