districts

img

பிச்சாவரம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பிச்சாவரம்,மே 30- கோடையில் பிச்சாவரம் படகு சவாரி குதூகலமாக இருப்பதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. சுமார்  1,100 ஹெக்டர்  பரப்பளவில் அமைந்துள்ள  இது உலகின்  இரண்டாவது பெரிய சதுப்புநில காடாக உள்ளது.  கடலின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்தக் காடுகளில் இயற்கை மூலிகை மரங்களான சுரபுன்னை, தில்லை சங்குசெடி, பீஞ்சல், பூவரசு, வெண்கண்டல், சிறுகண்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகை தாவர செடிகள் உள்ளன. இதில் தில்லை மரம் நடராஜர் கோவிலின் தல விருச்சகமாகும். ஆகையால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளதால்  கடந்த  1984 ஆம் ஆண்டு  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவகப்  பட்டது. இங்குத் தற்போது 100-க்கும் மேற்பட்ட அளவில் துடுப்பு படகு மற்றும் இயந்திர படகுகள் உள்ளன. இந்தச் சுற்றுலா மையத்திற்கு அரசு விடுமுறை நாட்கள், பண்டிகைக்காலம், கோடைகாலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் வெளிமாநில மற்றும் வெளிநாடுகளி லிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து மகிழ்கின்றனர்.

சதுப்பு நில காடுகளில் உள்ள பந்தல் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள சுரபுண்ணை மரங்கள் உள்ளிட்ட இயற்கை அரண்களை ரசித்தவாறு படகு சவாரி செய்கின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்ப தால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கார். வேன், பேரூந்து உள்ளிட்ட வாகனம் மூலம் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். பிச்சாவரம் படகு சவாரி ஆனந்தத்தின் உச்சம் தொடு வதாக சுற்றுலா பயணிகள் பகிர்கின்றனர். இதனிடையே  திமுகஅரசு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றுலா மையத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால் அதற்கான பணிகள் இன்று வரை தொடங்கவில்லை. அரசு அறிவித்த வாறு சுற்றுலா மையத்தை மேம்  படுத்தினால் இப்பகுதி வளர்ச்சி அடைவதோடு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். விழுப்புரத்தை சேர்ந்த தேவி என்பவரிடம் படகுசவாரி குறித்து கேட்டபோது, பிச்சாவரத்தில் படகு சவாரியில் அதிக இடங்களைச் சுற்றி காண்பிக்கவில்லை, தற்போது வனத்துறை தடை செய்துள்ளதாக கூறி ஒரு வாய்க்காலை மட்டுமே காட்டு கிறார்கள். இது புதியதாக வருபவர்க ளுக்கு உற்சாகத்தை குறைக்கும். சதுப்பு நிலக்காடுகளில் உள்ள வாய்கால்களில் தேவையற்ற கட்டுபாடு இல்லாமல் சுற்றுலா பயணி கள் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்குத் தரமான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வைகளை அமைக்க வேண்டும், படகு சவாரி செய்யும் நேரத்தைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.