சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் எச்சரிக்கை
கோவை, மார்ச் 10– வேற்றுமையில் ஒற்றுமையாய் உள்ள மக்கள் எழுச்சிகரமான போராட் டத்தை நடத்துவார்கள். அதன்மூலம் மத்திய அரசின் நாசகர திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவார்கள் என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா, மார்க்சிஸ்ட் கட்சி யின் நிதியளிப்பு விழா பொதுக்கூட் டம் திங்களன்று கோவை பீளமேடு நக ரக்குழுவின் சார்பில் பீளமேடு ரொட் டிக்கடை மைதானத்தில் நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கன கராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றி பேசுகையில், மார்க்சிஸ்ட் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்துள் ளது. பத்து முதல்வரை ஆட்சியில் அமர வைத்துள்ளது. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஏராள மானோர் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளனர். இந்த பதவி ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் தந் தது. அவர்களின் நலனுக்காக பணி யாற்றுவோம் என்கிற உறுதியேற்று பணியாற்றுபவர்கள். ஒவ்வொரு கம்யூ னிஸ்ட்டும் அத்தகைய உறுதியோடு தான் பணியாற்றி வருகின்றனர். நாங்கள் கட்சியின் வளர்ச்சிகாக ஒரு போதும் கார்ப்ரேட்டுகளிடமும், பெரு முதலாளிகளிடமும் நிதி சேகரிப்ப தில்லை. நிதியை சாதாரண ஏழை, எளிய உழைப்பாளி மக்களிடம்தான் சேகரிக்க வேண்டும் என்கிற விதியை வகுத்து செயல்பட்டு வருகிறோம் என் றார்.
மேலும், தற்போதைய பொதுச்செ யலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ்காரத் தவிர்த்த இதற்கு முந் தைய மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து பொதுச்செயலாளர்களும் சுதந்திர போராட்ட வீரர்களாகவே இருந்துள்ளனர் என்பது எங்கள் கட் சியின் பெருமைமிகு வரலாறாகும். அதேநேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத, காட்டிக் கொடுத்த கும்பல் இன்று மத்தியில் அதி காரத்தைக் கைப்பற்றியுள்ளது. தமிழ கத்தின் அனைத்து ஊர்களிலும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற, சித்தரவதைப் பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பெயர்ப் பட்டியலை என்னால் சொல்ல முடியும். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் கும்ப லுக்கு அப்படி ஒரே ஒருவர் பெயரை சொல்ல முடியுமா என்கிற சவாலை விடுகிறோம். எந்த வரலாறும் இல்லாத இந்த கும்பல் ஆட்சியைப் பிடித்துவிட்டு யார் தேசபக்தன் என் கிற சான்றிதழை கொடுப்பதுதான் வேதனை. இதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த இவர்க ளின் நடவடிக்கை காஷ்மீர் மாநிலத் திற்கு மட்டுமான ஆபத்தல்ல. இந்தியா வில் 10 மாநிலங்கள் இதுபோன்ற சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றுள்ள மாநி லங்களாகும். தமிழகம் கூட மற்ற மாநி லங்களில் இல்லாத வகையில் 69 சதவி கித இடஒதுக்கீட்டை பெற்றுள்ள மாநி லமாகும். குஜராத் மாநிலத்தில் குஜராத் தின் குடியுரிமை பெறாத எந்த ஒருவ ரும் அங்குள்ள நஞ்சை நிலத்தை வாங்க முடியாது என்பது அம்மாநிலத்திற் கான சிறப்பு அந்தஸ்த்தாகும். இதுகு றித்து எந்த பாஜக, ஆர்எஸ்எஸ் கும்ப லும் வாயை திறக்காது. ஆகவே, இதே நிலை நீடித்தால் தமிழகத்தை இரண் டாக உடைக்கும் நடவடிக்கைக்கும் இந்த கும்பல் செல்லும் ஆபத்து உள் ளது. இதன்காரணமாகத்தான் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட ஒரு மொழி பேசும் மாநிலங்களை இரண்டாக பிரித்துள் ளது. ஏனென்றால் மொழி வழி மாநி லத்தை ஏற்காத கட்சி பாஜக.
இந்நிலையில்தான், சட்டமன்றத் தில் எடப்பாடியார் குடியுரிமைச் சட்டத் தினால் இந்தியாவில் யார் பாதிக்கப் பட்டுள்ளார் என ஆவேசமாக கேள்வி கேட்கிறார். அசாம் மாநிலத்தில் என் ஆர்சி கணக்கெடுப்பில் 19 லட்சம் மக்கள் குடியுரிமைப் பறிக்கப்பட்டுள் ளது. இதில் 12 லட்சம் பேர் இந்துக் கள், ஐந்து லட்சம் பேர் இஸ்லாமியர் கள், மற்றவர்கள் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள். 1973 முதல் 77 வரை இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த பக்ரூதின் அலியின் குடும்பத் தினருக்கு குடியுரிமை பறிக்கப்பட்டுள் ளது. இதேபோல் அசாம் மாநிலத் தின் முன்னாள் முதல்வருக்கு குடியு ரிமை பறிக்கப்பட்டுள்ளது, கார்கில் போரில் சிறப்பாக பணியாற்றி வாஜ் பாய் கையில் பதக்கம் பெற்ற ராணுவ வீரருக்கு குடியுரிமை பறிக்கப்பட்டுள் ளது. இவர்கள் எல்லாம் இஸ்லாமி யர்கள். வேறு யாராவது இந்துக் கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என் கிற கேள்வி எழுகிறது. இதற்கும் பதில் உள்ளது சந்திராயன் 2 விண் கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகளில் மூத்த விஞ்ஞானி ஜெய்ஜேந்திர கோஸ் வாமி இவருக்கும் குடியுரிமை இல்லை என அறிவிக்கப்பட்டது. இவர் பெயரே இந்து என்பதை சொல்லிவிடும். இப் போது சுதாரித்துக் கொண்டு அவரை சரி செய்து அறிக்கைவிட செய்துள் ளார்கள். இதில், எனது ஆவணத்தை காட்ட நேரம் கிடைக்கவில்லை. ஆகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தலைசிறந்த விஞ்ஞானிக்கே இதுதான் நிலை என்றால், நமது குப்பனுக்கும், சுப்ப னுக்கும் எந்த நிலை ஏற்படும் என்பது தான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ் வீடியோ வெளியிடுகிறார். இதனை பிரதமர் முன்மொழிகிறார். ஆவணங்கள் இல் லாமல் காட்டை அழித்து அபகரித்த ஜக்கி வாசுதேவுக்கு மோடி ஆதரவு தருகிறார் என்றால், மோடி நரவேட் டையாடினாலும் ஜக்கி ஆதரிப்பார் என்பதே உண்மை. இவர் சத்குரு அல்ல, சத்ரூ என்பதை உணர்ந்து அவர் வெளியிட்ட வீடியோவின் பின்னூட் டத்தில் ஏராளமானோர் தங்களது சந் தேகங்களை எழுப்பி கேள்வி கேட்ட தும், இவரை கழுவி கழுவி ஊற்றியதும் தற்போது அந்த வீடியோவையே நீக்கி விட்டார் ஜக்கி வாசுதேவ். இது இஸ்லா மியர்களுக்கு எதிரான சட்டமல்ல. அனைத்து மக்களுக்கும் எதிரான சட்டம் என்பதால்தான் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
இந்தியாவில் 12 கோடிக்கும் அதி கமான மக்களுக்கு ஒரு பிடி மண் கூட சொந்தம் கிடையாது. தமிழகத்தில் 25 லட்சம் மக்களுக்கு சொந்த வீடு இல்லை. சென்னையில் இரவில் நடை பாதையோரங்களில் ஆயிரக்கணக் கான ஏழை ,எளிய உழைப்பாளி மக்கள் வாழ்விடங்களாக மாற்றியுள்ள அவ லத்தை பார்க்க முடியும். இவர்களிடம் எல்லாம் எந்த ஆவணம் இருக்கும். ரேசன்கார்டு கூட இல்லாத இவர்களை யெல்லாம் என்ன செய்யப்போகிறீர் கள் என்றே கேள்வி எழுப்புகிறோம். கேரளத்தில் எதிரும், புதிருமாக உள்ள அரசியல் கட்சிகளான மார்க் சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஒன்றிணைந்து இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் 13 மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜ கவின் ஆட்சியில் உள்ள அசாம் மாநில பாஜக முதல்வர் எதிர்க்கிறார். பாஜக வின் கூட்டணி ஆட்சியாக உள்ள பீகாரில் எதிர்த்து தீர்மானம் போடப்ப டுகிறது. இவ்வளவையும் பார்த்து விட்டு யாருக்கு பாதிப்பு என்று எடப் பாடி கேட்டகிறார் என்றால் இவருக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என்பது தெளிவாகி றது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற் றினால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுகிறார்கள். ஆனால், இந்திய அரசி யல் சட்டத்தை திருத்திய வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டமி யற்றி, நீதிமன்றம் உத்தரவிட்ட பின் னும் தமிழக மக்கள் மன்றம் நடத்திய எழுச்சிகரமான போராட்டத்தின் கார ணமாக அரசியல் சட்டத்தையே முதன் முறையாக திருத்த முடிந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையாய் உள்ள மக்கள் எழுச்சிகரமான போராட் டத்தை நடத்துவர்கள். மத்திய அரசின் நாசகர திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவார்கள். இவ்வாறு க. கனகராஜ் பேசினார்.
முன்னதாக, இக்கூட்டத்திற்கு பீள மேடு நகரச் செயலாளர் கே.பாண்டி யன் தலைமை வகித்தார். பி.ஏ.சுப்பிர மணியம் வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் உரையாற்றினர். சிங்கை நகரக்குழு செயலாளர் வி. தெய்வேந்திரன், பீளமேடு நகரக்குழு உறுப்பினர்கள் ஏ.மேகநாதன், அய்யா சாமி, எம். ஜோதிபாசு, ஜோதிமணி, சுமதி மற்றும் எம்.சுடலைமுத்து, என். செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். மேலும், பீள மேடு நகர பகுதியில் கட்சியின் வளர்ச்சி நிதியாக வீடுவீடாக சென்று பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.2 லட் சத்து 10 ஆயிரம் தலைவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. முடிவில் வி.பிரபாக ரன் நன்றி கூறினார்.