கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவில் கே.பாலபாரதி பெருமிதம்
நாமக்கல். நவ.18- தோழமை அன்போடு உள்ள ஒரே இடம் செங்கொடி இருக்கும் இடம் மட்டுமே என இந்திய கம்யூ னிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவில் கே.பாலபாரதி பெருமி தத்துடன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழுவின் சார்பில் பாப்பம்பாளை யம் பாரதி நகரில் இந்திய கம்யூ னிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கட்சியின் ஒன் றியகுழு உறுப்பினர் எம்.சக்தி வேல் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் நாச்சிமுத்து வரவேற் புரையாற்றினார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான கே.பாலபாரதி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாமக்கல். நவ.18- தோழமை அன்போடு உள்ள ஒரே இடம் செங்கொடி இருக்கும் இடம் மட்டுமே என இந்திய கம்யூ னிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவில் கே.பாலபாரதி பெருமி தத்துடன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழுவின் சார்பில் பாப்பம்பாளை யம் பாரதி நகரில் இந்திய கம்யூ னிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கட்சியின் ஒன் றியகுழு உறுப்பினர் எம்.சக்தி வேல் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் நாச்சிமுத்து வரவேற் புரையாற்றினார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான கே.பாலபாரதி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியவர்கள் கம்யூனிஸ்டு கள். ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு 3 சதவிகித தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பணத்தின் பக்கம் நிற்காமல் நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள் கம்யூனிஸ்ட் கள். குடிநீர் பிரச்சனைகள் முதல் காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான போராட்டம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் எவ்வித வேறுபாடு பார்க்காமல் மக்களை மட்டுமே பார்த்து முத லில் களத்தில் நிற்பவர்கள் கம்யூ னிஸ்டுகள். தோழமை அன்போடு உள்ள ஒரே இடம் செங்கொடி இருக்கும் இடம் மட்டுமே தான். இந்த இயக்கத்தின் நூற் றாண்டு விழாவை கொண்டாடு கிறோம். வெறுமனே கொண்டா டுவதற்காக அல்ல. விரைவில் இங்கு ஆடி பறக்கும் செங்கொடி, உலகம் முழுவதும் பறக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையி லும், செங்கோட்டையிலும் பறக்கும். அந்த நாளை நோக்கி தொழிலாளர்களை, விவசாயி களை, விசாய தொழிலாளர்களை நோக்கி பயணிக்கும் இந்த நூற் றாண்டு விழா என பாலபாரதி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். முன்னதாக, இவ்விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.மோகன், இ.கோவிந்தராஜ், ஆர்.அலமேலு மற்றும் பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.