உடுமலை, பிப். 14- அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் புதிய முதல்வர் பொறுப்பேற்றார். உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியின் புதிய முதல்வராக கப்பல் படையைச் சேர்ந்த கேப்டன் நிர்மல் ரகு விஎஸ்எம் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர் இந்தியாவின் கப்பல் படை தளங்களில் குறிப்பாக ஐஎன்எஸ் குகுரி, பிரமபுத்திரா, பெட்வ ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார். மேலும் நீர் மூழ்கி போர் கப்பல் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவரின் பணியினை பாராட்டி குடியரசு தின விழாவில் வைசிட் சேவா மெடல் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், பூனாவிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பி.டெக் பிரிவின் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.