ஈரோடு, ஜூலை 19- சட்டசபையில் தவறான தகவல் களை பதிவு செய்து, விவசாயத்துக்கு எதிராக செயல்படும் மின் துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தி யாளர்களிடம் அவர் மேலும் கூறுகை யில், விளை நிலங்கள் வழியாக, கோவை முதல், தருமபுரி, திருவண்ணா மலை, வேலுார் வரை, 16 மாவட்டங் களில் உயர் மின் கோபுரம் அமைக் கின்றனர். இதனை சாலை ஓரமாக, கேபிள் மூலம் கொண்டு செல்லுங்கள் என கேட்கிறோம். இது ஒரு திட்டம் மட்டுமின்றி, விளை நிலங்களை நாசப்படுத்தும் வகையில் பல திட்டங் களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கொண்டு வருகிறது. இவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம். சட்டசபையில், பூமிக்கடியில் கேபிள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல முடியாது என்றும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் எந்த பாதிப் பும் இல்லை என்றும், அனைத்து விவ சாயிகளும் இதற்கு சம்மதிக்கின்றனர் என்றும், சட்டசபையில் மின் துறை அமைச்சர் தங்கமணி தவறான தக வல்களை தருகிறார். பவர் கிரிட் நிறு வனத்துக்கு ஆதரவாகவும், விவ சாயத்துக்கும், விவசாயிகளுக்கும் எதி ராக அவர் பேசி வருகிறார். அதேநேரம், மத்திய அரசு போர் பந்தரில் இருந்து தென் ஆப்பிரிக்கா வுக்கு,1,100 கிலோவாட் திறன் கொண்ட மின்சாரத்தை பூமிக்கடியில் கேபிள் மூலமாக 3,600 கி.மீ. கொண்டு செல்கின்றனர். அங்கு சாத்தியமா கும்போது, தமிழகத்தில் ஏன் சாத்திய மாகாது எனக் கேள்வி எழுப்பினார். எனவே, விவசாயிகளுக்கு எதி ராக சட்டசபையில் பொய்யான தகவல்களை பதிவு செய்யும் அமைச் சர் தங்கமணியை மாற்றிவிட்டு, மின்துறைக்கு புதிய அமைச்சர் நிய மிக்க வேண்டும். அவர் விவசாயத்தை புரிந்தவராக இருக்க வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக வரும் 22ஆம் தேதி தில்லியில், மின் மற்றும் எரிசக்தி துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் துறை, நிதித்துறை அமைச்சர்களைச் சந்தித்து, இத்திட் டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்துகிறோம். 23, 24ல் தில்லியில் தொடர் போராட்டம் நடத்துகிறோம். இதில், தமிழக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற் கின்றனர். இம்மூன்று நாட்களில், பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளோம். அவரையும் சந்தித்து இப்பிரச்சனை தொடர்பாக பேச உள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.