தருமபுரி, செப்.27- பாப்பாரப்பட்டி அருகே தர மான சாலை அமைக்காத ஒப்பந்த தாரரை கண்டித்து வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 12 ஆவது வார்டு பாரதிதாசன் தெரு வில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நகரத்தின் மையப் பகுதியில் அமைந் துள்ள இந்த தெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் பழைய சாலையை முழுவதுமாக அகற்றாமல் பொக்லைன் மூலம் பழைய சாலையை கொத்திவிட்டு அதன்மீது புதிய சாலை அமைக்கும் பணியை செய்து வந்துள்ளார். இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதன்பின் போராட்டத்திற்கு தலைமை வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாரப் பட்டி பகுதிக் குழு செயலாளர் ஆர். சின்னசாமி, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அப்போது, இச் சாலை நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் தர மில்லாத சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, இந்த சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்பார்வை செய்து, தரமான சாலை அமைத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தரமான சாலை அமைக்கவில்லை எனில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.