திருப்பூர், ஜூலை 10 – திருப்பூர் மாநகராட்சி 18, 19ஆவது வார்டுகளில் தேங்கிக் கிடக்கும் அடிப்படைப் பிரச்ச னைகளைத் தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் பங்கேற்ற நடைப்பயண இயக்கம் மேற் கொள்ளப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட முன்னாள் நெருப் பெரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் புதிய குடியிருப்புகள் மற்றும் சிறு, குறு தொழிற்கூடங் கூடங்கள் வேகமாக அதிகரித் துள்ளன. தற்போது 18, 19ஆவது வார்டாக இருக்கும் இப்பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப் பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் யார் யாருக்கு எந்த தகுதியின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப் படும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அதே போல் வாவிபாளையம், கணக்கம் பாளையம், பெருமாநல்லூர் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர பேருந்து வசதி குறைவாக உள்ளது. வாவி பாளையம் நூலகம் நிர்ணயிக்கப் பட்ட நேரத்திற்கு செயல்படாமல் உள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதுடன், பேருந்து வசதியை அதிகரிப்பது, நூலகத்தை முழு நேரம் செயல்பட வைப்பது, வாவி பாளையம், ஜி.என்.கார்டன், நெருப் பெரிச்சல், திருமலைநகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை, தெரு விளக்கு, சாலை வசதி செய்து தருவது, ஜிஎன் கார்டன் நகர்ப்புற சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் செயல்படுவதாக மாற்றுவது, இந்த வட்டாரத்தில் குண்டும், குழியுமான சாலைகளைச் செப்ப னிடுவது, மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்குவது ஆகிய அடிப் படை பணிகளை நிறைவேற்றுமாறு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. அத்துடன் மேற்படி பகுதிகள் முழுவதிலும் குறைவழுத்த மின் சாரம் காரணமாக டிவி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட மின் உபகர ணங்கள் அடிக்கடி பழுதடைவ துடன், சிறு, குறு தொழில் துறை யினரும் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். எனவே இப் பகுதியில் துணை மின்நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் வாவிபாளையம் மற்றும் நெருப் பெரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப் பயணம் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத் தனர். அதிகாரிகள் அப்பகுதியில் வந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதாக தெரிவித்தனர். எனினும் வாவிபாளையம் மின் வாரிய அலுவலகம் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் நடைப் பயண இயக்கம் தொடங்கியது. கட்சியின் வாவிபாளையம் கிளைச் செயலாளர் அழகு தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.காளியப்பன், ஆ.சிகாமணி, சி. பானுமதி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.மாரப்பன், வி.பி.சாமி நாதன், பிரதாப் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பெண்கள் உள்பட பெருந்திரளானோர் நடைப் பயணத்தில் பங்கேற்றனர். வாவி பாளையத்தில் தொடங்கி நெருப் பெரிச்சல் மாநகராட்சி வரி வசூல் மைய வளாகத்தில் இந்த நடைப் பயணம் நிறைவடைந்தது. முன்னதாக மின் வாரிய அலுவல கத்தில் உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்த பின் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் சில கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்றுவ தாகவும், துணை மின்நிலையம் அமைக்க உரிய இடம் தேர்வு செய்து வருவதாகவும், அதன் பிறகு குறை மின்னழுத்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நடைப்பயணம் முடிவடைந்த நிலையில் வருவாய்த் துறை சார்பில் தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். சம்பந்தப்பட்ட அதி காரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவிக்கப்பட்டது.