tamilnadu

சாலையை கடக்க முயன்றவர் பலி

கோவை,டிச.31- கோவை கோவில்பாளையம் விஜபி காலனியைச் சேர்ந்தவர் லூயிஸ் கபேல்(57). இவர்,ஐடி கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார்.இவர் மனைவி புஷ்பராணியை (50) பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு மகள் விக்டோரியாவுடன் வசித்து வந்துள் ளார். இந்நிலையில் மகள் விக்டோரியாவுடன் தனது மனை வியை பார்த்து விட்டு இருவரும் துடியலூர் வந்துள்ளனர். கோவில்பாளையம் பேருந்து ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி லூயிஸ் கபேல் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மகள் விக்டோரியா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி னார். இந்த சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;