tamilnadu

img

கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை

மே.பாளையம், ஜூன் 14- மேட்டுப்பாளையத்தில் கம்பி வேலியில் சிக்கி படுகாமடைந்து உயிருக்குப் போரா டிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி மீட்கப் பட்டுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் அண்மை காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் மலை யடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசா யிகள் வளர்த்து வரும் கால்நடைகளை உண வுக்காக வேட்டையாடி கொன்று விடுகிறது. மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மோத் தேபாளையம் என்னும் பகுதியில் சிறுத்தை களின் ஊடுருவல் அதிகரித்த காரணத்தி னால் அங்கு வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு அண்மையில் சிறுத்தை யொன்று பிடிபட்டது.

அதனை பாதுகாப் பாகக் கொண்டு சென்று சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் விடுவித்த நிலையில் மீண் டும் அதே பகுதியில் சிறுத்தைகளால் கால்ந டைகள் கொல்லபட்டன. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்தி ருந்த நிலையில் ஞாயிறன்று காலை  மோத் தேபாளையம்  கிராமத்தில் உள்ள ஒரு தோட் டத்தை சுற்றி போடப்பட்டிருந்த முள் கம்பி யில் ஒரு சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடு வதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித் தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் முள் கம்பியில் சிக்கிய சிறுத்தையை மருத்துவர்கள் உதவியோடு மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.  

இதனையடுத்து வனத்துறையினர் கூறு கையில், கடுமையாக காயமடைந்த சிறுத் தையை தற்போது காட்டுக்குள் விட இய லாது எனவும், அதற்கு சிகிசையளிக்க முடி வெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், முள் கம்பியால் ஏற்பட்ட காயம் மிக ஆழமாக உள்ளதாகவும் சிறுத்தை வேலியில் சிக்கி இரண்டு நாட்களாவது ஆகியிருக்க வேண்டும் என தெரிவித்த வனத்துறையினர் முழுமையான சிகிச்சைக்கு பின்னரே சிறுத்தை காட்டுக்குள் விடுவது பற்றி முடி வெடுக்கப்படும் என்றனர்.