tamilnadu

img

காரமடை அரங்கநாதர் கோவில் நிதி வசூலில் முறைகேடு

அறநிலையத்துறை தணிக்கை குழு விசாரணை

மேட்டுப்பாளையம், அக்.11- மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அரங்க நாதர் கோவில் நிதி வசூலில் நடைபெற்ற முறைகேடு  தொடர்பாக உயர்நீதிமன்ற உத்திரவின்படி அறநிலை யத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் நேரில் விசா ரணை மேற்கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள காரமடை அரங்கநாதர் கோவிலானது 1000 ஆண்டு களுக்கும் மேல் பழமை வாய்ந்த வைணவ திருத்தலமாகும். கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தேர் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வது வழக்கம். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கபட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் கும்பாபிஷேக நிகழ்வுக்காக பக்தர்கள் பலரிடம் இருந்து  பல லட்ச ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு,  கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில் நன்கொடையாளர்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப் படாமல் முறைகேடுகள் செய்ததாக கோவில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உபயதாரர்கள் சிலர் இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால், இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது.

இதனையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக கோவிலுக்கு நிதி வழங்கியவர்கள் சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசா ரணையின்போது இது தொடர்பாக உடனடியாக விசா ரணை நடத்த உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தர வின் பேரில் இந்து அறநிலையத்துறை தலைமை தணிக்கை குழு அலுவலர் ஓம்லட்சுமி தலைமையில், சென்னை, கோவை ஆகிய அறநிலைய துறை அலுவலகங்களில் இருந்து 4 அதிகாரிகள் இணைந்து காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு நேரில் வந்து கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நடைபெற்ற நன்கொடை வசூல், இது தொடர்பான கோப்புகளையும், வரவு, செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். மேலும் 2015 ஆம் ஆண்டு கோவிலில் பணிபுரிந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் விசா ரனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு பணிகளை முடித்த தணிக்கை குழுவினர் இது குறித்த ஆய்வு அறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க உள்ள தாகவும், பின்னர் இந்த ஆய்வறிக்கை முறைப்படி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடையே தணிக்கைக்கு வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட உள்ளூர் பக்தர்கள் சிலர் இம்முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.