tamilnadu

img

உணவு உற்பத்தியை தவிர வேறு எதுவும் அறியாத அப்பாவி விவசாயிகளை அச்சுறுத்துவதா?

கோவை, ஜூலை 6- விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதி ராகப் போராடிவரும் விவசாயி கள், காவல் துறையினர் மற்றும்  அரசு அலுவலர்களால் அச்சுறுத் தப்படும் நிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனைச் சந்தித்து முறை யிட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட் டங்கள் வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற் கான கோபுரங்கள் அமைக்கும் பணியில் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் எது வும் நடத்தாமல் அடாவடியாக விளை நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின் கோபுரங்கள் அமைப்பதற்கான குழி தோண்டி  வருகின்றனர். மேலும் மின் கோபுரங்கள் அமைக்கப்படும் மின்பாதைகளில் மின் இணைப்பு இல்லாமலேயே மின் விளக்குகள் எரிவதாகவும், இதனால் மக்க ளுக்கும், விவசாயத்திற்கும், கால் நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். ஆகவே இத்திட்டத்தை புதை வடமாக சாலை வழியாக மின்பாதையை அமைக்க வேண் டும் என்று விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும் தமிழக மின் துறை அமைச்சரும், அரசு அதிகாரிக ளும், காவல் துறையினரின் துணையோடு இத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் விவசாயிகளையும், பெண் களையும் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கோவை, காந்தி புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் சனி யன்று கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னைச் சந்தித்தனர். அப்போது,  உயர் மின்கோபுரம் அமைப்ப தற்கு வரும் அதிகாரிகள் காவல் துறையினரை ஏவி தாங்கள்  ஒடுக்குவதாகவும், பெண்கள்  என்றும் பாராமல் கைது செய்ய வும் முயல்கின்றனர். உணவு உற்பத்தியை தவிர வேறு எதுவும் செய்யாத விவசாயிகளை அச் சுறுத்தும் நடவடிக்கை குறித் தும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட வேண்டும்  எனவும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக பி.ஆர். நடராஜன் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் நிர்வாகிகள் தமிழ் ராஜேந் திரன், பொன்னுசாமி, சண்முக சுந்தரம் மற்றும் கொங்குபேர வையின் நிர்வாகி பெரியசாமி, சிவராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் வந்திருந்தனர்.