கோவை, ஆக.9- கோவையில் தொடர் மழையின் காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதும், பல இடங் களில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதும், பல பகுதிகளில் தீவு கள் போல காட்சியளிக்கிறது. கோவையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையினால் நொய் யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதி களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப் பாக, கரும்புக்கடை மற்றும் செல்வ புரம், ஆத்துப்பாலம், ஆசாத் நகர், நியூ காலனி, மதினா நகர் உள்ள குடியிருப்பு கள் நீரில் மூழ்கின. இவர்களை அப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். இதேபோல், கோவை பேரூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியில் இருக் கும் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வர முடியாதவாறு பொதுமக்கள் சிக்கி தவித்தனர். இது தொடர்பாக தீய ணைப்புத் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து தீயனைப்பு அலுவலர்கள் 25-க்கும் மேற்பட்ட தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை யினர் குடியிருப்பு பகுதியில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். மழைநீரில் சிக்கிக் கொண்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நடக்க முடியாத வர்களை தீயணைப்பு துறையினர் தூக்கி வந்து பாதுகாப்பான இடங் களில் விட்டனர். இதேபோல், ஆவரம்பாளையம் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந் தது. ஒண்டிபுதூர் அரசு பள்ளி தண் ணீரால் சூழப்பட்டுள்ளது. மேலும், கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, தொடர்ந்து மீட்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில் பருவமழை கார ணமாக ராஜவாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது. தொடர் மழையினால், உக் கடம் - ஆத்துப்பாலம் சாலை மூடப் பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத வகை யில் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் இரண்டு கரைகளை தாண்டி வெள்ள நீர் செல்லும் அளவிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனி டையே, வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள நொய்யல் ஆற் றுப் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாலத் திற்கு மேலே பல அடி தூரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், சிங்காநல்லூர் - வெள்ள லூர் சாலையில் போக்குவரத்து துண் டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலத்திற்கு மேலே தண்ணீர் செல் வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதேபோல, ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கி யுள்ளது. இரண்டாவது நாளாக அச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் பெய் யும் கனமழையின் காரணமாக, நொய் யல் ஆற்றில் 4,650 கன அடி தண் ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரை யோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி- வால்பாறை
வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெருத்த சேதம் ஏற்பட் டுள்ளது. ஆனைமலை காவல் நிலைய சரகம் சர்க்கார்பதி பவர் ஹவுஸ் பகுதி யிலிருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லும் காண்டூர் கால்வாயில் சர்க்கார்பதி பவர் ஹவுஸ் அருகில் ஜீரோ பாயிண்ட் என்னும் இடத்தில் பாறை சரிந்து கால்வாயில் விழுந்ததில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால் வாய் நிரம்பி பக்கவாட்டில் வழிந்து அருகில் இருந்த சர்க்கார்பதி நாகர் ஊத்து பழங்குடியினர் வசிக்கும் இரண்டு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்த 22 குடியிருப்புகளில் 19 குடும் பங்கள் வசித்து வந்தனர். இவர்களின் வீடுகள் மற்றும் பொருட்களை வெள்ள நீர் அடித்து சென்றது. இதில் அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்த பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய துறை அலுவலர் கள் வன துறை அலுவலர்களின் உத வியுடன் மீட்கப்பட்டு அங்கு உள்ள மின் வாரியத்திற்கு சொந்தமான குடி யிருப்பு மற்றும் மின்வாரிய அலுவல கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கின் போது குஞ்சப்பன் என்பவரது இரண்டரை வயது மகள் சுந்தரி என்பவர் மட்டும் காணாவில்லை.இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி காயம்பட்ட அழ கம்மாள், கிருஷ்ணன், ஜெயா, ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உடலில் பல இடங் களில் சிராய்ப்பு காயம் ஏற்பட் டது. சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற் பட்டதால் அவர்களை வனத்துறை அலுவலர்கள் மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக பொள்ளாச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருஷ்ணன் என்பவருக்கு மட்டும் அதிக காயம் ஏற்பட்டு மூச்சு திணறல் அதிகம் உள்ளதால் அவருக்கு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் இருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினரும், வருவாய்த் துறை ஆய்வாளர் கருப் பய்யா தலைமையில் வருவாய்த் துறை யினரும் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவ லர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் தீயணைப்பு துறை யினர் காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டுள்ளனர். இதேபோல், வால்பாறையில் வர லாறு காணத மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங் கியுள்ளது. அரசு போக்குவரத்து வால்பாறை கிளை பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் எரி பொருள் சேமிப்பு தொட்டி முழுமை யாக மூடியது. மேலும், பணிமனை யின் உள்ள மின்சாதன பொருட்கள், பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. இதன்காரணமாக லட்சக்கனக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேத மாகியுள்ளது. இதுகுறித்து சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தினர் கூறு கையில், வால்பாறை பணிமனையில் தொடர்ந்து வெள்ளம் வந்தால் மூழ்கிவி டுகிறது. இதுகுறித்து ஏற்கனவே நிர் வாகத்திடம் உரிய ஏற்பாட்டை செய்து தரவேண்டும் என வலியுறுத்தினோம். ஆனாலும் போக்குவரத்து கழக நிர் வாகம் அலட்சியப்படுத்தியதால் தற் போதும் இந்த பெரும் சேதம் ஏற்பட் டுள்ளது என குற்றம்சாட்டினர்.