tamilnadu

சிறுமி பாலியல் பலாத்காரம் கோவில் பூசாரி கைது

கோவை, ஏப். 28-கோவையில் 8 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவையை அடுத்த கோவில்பாளையம்அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாகதண்டபாணி (65) என்பவர் உள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவிலின் அருகே அதே கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமியை கோவிலின்உள்ளே அழைத்து சென்ற பூசாரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, வலியால் துடித்த சிறுமியை பெற்றோர்கள் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து விசாரிக்கையில் கோவில் பூசாரி பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றம் உறுதியானதையடுத்து துடியலூர்அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்தலைமையில் கோவில் பூசாரி தண்டபாணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;