கோவை, செப்.10- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான வி.கே. தஹில் ரமணியை மேகாலயா விற்கு பணியிட மாற்றம் செய்தது உள்ளிட்ட கொலீஜியத்தின் நட வடிக்கைகள் நீதித்துறையின் செயல்பாட்டை சீரழிப்பதாக குற்றம்சாட்டி கோவையில் வழக் கறிஞர்கள் பணிகளை புறக் கணித்து கண்டன முழக்க ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி. கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், மேகலாய மாநில தலைமை நீதி பதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வி.கே.தஹில் ரமணி கோரிக்கை விடுத்தார். இதனை கொலீஜியம் நிராகரிதத்தை தொடர்ந்து அவர் தனது ராஜி னாமா கடிதத்தை குடியரசு தலை வருக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதி பதி பாரபட்சமான முறையில் பணியிட இடமாற்றம் செய்யப் படுவதாக குற்றம்சாட்டி செவ்வா யன்று தமிழகம் மற்றும் புதுச் சேரி வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன்ஒருபகுதியாக கோவை யில் 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடு பட்டனர். மேலும் இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் கூட்டு இயக்கம் சார்பாக கோவை நீதி மன்ற வாயில் முன்பாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக் கறிஞர்கள் கொலீஜியத்தின் செயல்பாடு அரசியல் தலையீட் டின் ஒருபகுதியாக உள்ளதாக வும், நீதித்துறையின் செயல் பாட்டை சீரழிக்கும் கொலீஜி யத்தின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கமிட்டனர். முன்னதாக, உச்ச நீதிமன்றத் திற்கு நீதிபதியாக தேர்வு செய் யப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த மூத்த நீதிபதி யான சுதாகரின் பெயர் விடுபட் டுள்ளதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரி வித்தனர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.