பொள்ளாச்சி, ஜுன் 29- பொள்ளாச்சி டாப்சிலிப் வரகழியாறு முகாமில் மரக் கூண்டில் வைக்கப்ட்டிருந்த சின்னத்தம்பி யானை, 4 மாதத் திற்கு பிறகு மரக்கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. கோவை தடாகம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிவந்த சின்னத்தம்பி என அழைக்கப்பட்ட காட்டு யானையானது கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது. இதன்பின் பொள்ளாச்சி டாப்சிலிப்-வர கழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மீண்டும் கடந்த பிப்ரவரி 16ம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உத வியுடன் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகழியாறு வளர்ப்பு யானைகள் முகா மிற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு கடந்த 4 மாதங்களாக மரக்கூண்டில் வைக்கப் பட்டு பாகன்கள் மூலம் சின்னத்தம்பி யானை பராமரிக் கப்பட்டு, கும்கி யானைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த பாகன்களிடம் எளிதில் பழகியதுடன், பாகன் களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது. இச்சூழலில் சின்னத்தம்பி யானையானது சிறை வைக்கப்பட்ட மரக்கூண்டிலிருந்து வெள்ளியன்று வனத்துறையினர் விடுவித்தனர்.இந்த யானையை முகாம் யானைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.