கோவை, மே 27-லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும்இடைத்தரகரை திங்களன்று காவல்துறையினர் கைது செய்தனர். கோவை கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதற்கு சொத்து வரி புத்தகம் பெற மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். சொத்து வரி புத்தகம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சத் தொகையாக தருமாறு உதவி ஆணையர் ரவிக்குமார் கேட்டுள்ளார். தொடர் பேரத்திற்கு பிறகு ரூ.12 ஆயிரம் தொகையை இடைத்தரகர் பாலகிருஷ்ணனிடம் வழங்குமாறு கூறியிருந்தார். இதுகுறித்து குமார் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயணம் தடவிய பணத்தை குமாரிடம் கொடுத்தனர். அந்த தொகையை திங்களன்று பாலகிருஷ்ணனிடம் குமார் கொடுத்தார். பணத்தை பாலகிருஷ்ணன் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம்லஞ்ச தொகையை வாங்கக் கூறியமாநகராட்சி வடக்கு மண்டல உதவிஆணையர் ரவிக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதானஇருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.