ஈரோடு, ஜூலை 29- மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கருத் துக்களுக்கு மதிப்பளிக்காமல், நாடாளு மன்றத்தில் மெஜாரிட்டியை பயன்படுத்தி தாங்கள் விரும்பிய அனைத்து சட்டங் களையும் நிறைவேற்றி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட் டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட, விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் தற்போது தேவையில்லை என இந்த அரசு அறிவித்திருக்கிறது. இதேபோல் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கருத் துக்களுக்கு மதிப்பளிக்காமல், நாடாளு மன்றத்தில் மெஜாரிட்டியை பயன்படுத்தி தாங்கள் விரும்பிய அனைத்து சட்டங் களையும் நிறைவேற்றி வருகிறது. மேலும் பல தகவல்களை பெற ஏதுவாக இருந்த தகவல் அறியும் உரிமை சட்டம், தற்போது எவ்வித தகவலும் பெற முடியா மல் நீர்த்து போய் பயனற்றுக் கிடக்கிறது. மோட்டார் வாகன பதிவு கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு கடந்த 2017-2018ஆம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணி, கல்வி, குடிநீர் திட்டபணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.28,179 கோடி பயன்படுத்தாமல் விட்ட தால் அரசாங்கத்திற்கு திரும்ப போய் விட்டது. ஹைட்ரோ கார்பன், தேசிய கல்விக் கொள்கை, 10 சதவிகித இட ஒதுக்கீடு கொள் கைகளில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மத்திய அரசுடன் இணக்க மாக செயல்பட்டு எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தமி ழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின் றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட் டுள்ளது. நெல்லையில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள் ளனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கிறது எனத் தெரிவித்தார். இந்தசந்திப்பின்போது திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள் ளிட்டோர் உடனிருந்தனர்.