tamilnadu

img

நீண்ட நேரமாக காத்திருந்தாலும் பேருந்துகள் வருவதில்லை - பொதுமக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி, ஜூன் 10- பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்தாலும் போதுமான அளவு பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதில்லை என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோ ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பேருந்துகள் 50 சதவிகித அளவில் இயங்க லாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படை யில் பொள்ளாச்சியிலும் அரசுப்பேருந்துகள் இயக்கப் பட்டது. தற்போது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகின்றது. குறிப்பாக கிராமப்புற பேருந்து நிறுத்தங்களில் பெரும்பாலும் பேருந்துகள் நிறுத்தப்படுவ தில்லை. இதனால் பொதுமக்களுக்கு ஒரு பயனுமில்லை என பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

;