tamilnadu

img

வில்லுப்பாட்டு கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்

பொள்ளாச்சி, மே.11- அழிந்து வரும் வில்லுப்பாட்டு கலையைபாதுகாக்க அரசு பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும் என வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கத்தின் 48 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சிபொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ளதனியார் அரங்கில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைமாமணி சுப்புஆறுமுகம் மகள் பாரதி திருமகள் மற்றும் திருமகள் கலைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் பாரதியாரின் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களை வில்லுப்பாட்டு இசையில் பாடினர் . இதனைத் தொடர்ந்து பாரதி திருமகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி பல்கலைக் கழகங்களில் வில்லுப்பாட்டு கலையை பாடத் திட்டமாகக் கொண்டு வந்தால், வில்லுப்பாட்டு கலை வளர அஸ்திவாரமாக இருக்கும். குறிப்பாக எந்த செய்தியையும் சொல்வதற்கு வில்லுப் பாட்டை விட சிறந்த வழி இருக்க முடியாது. அறிவியல் மற்றும் விவசாயம் மருத்துவம் என எல்லாவற்றையும் இதன் மூலம் எளிமையாக வெளிபடுத்திச் சொல்ல முடியும். பொதுவாகவே, இக்காலத்தின் பள்ளிக்குழந்தைகள் ஆட்டமும், பாட்டமும் மட்டும்தான் கலை என்று நினைக்கிறார்கள். அதுமுற்றிலும் தவறானது. தற்போதைய சூழலில் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த வில்லுப்பாட்டுக் கலையை ஊக்குவிக்க கலை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திநிறுவனங்கள், பத்திரிகைகள் ஒரு பாலமாக செயல்பட்டால், இந்த வில்லுப்பாட்டு கலையை அடுத்த தலைமுறைக்கும் எளிதாககொண்டு செல்ல முடியும் என அவர் தெரிவித்தார் .