tamilnadu

img

நன்றி அறிவிப்பு பயணத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு

கோவை, ஜூன் 8– கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு வாத்தியம் இசைத்தும், வெடிவெடித்தும் கூட் டணி கட்சியினர் மற்றும் பொதுமக் கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகு தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பா ளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிட் டார். இவர் பாஜக வேட்பாளரைவிட 1.79 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்எஸ் குளம் ஒன்றியப்பகுதியில் சனிக்கி ழமையன்று பி.ஆர்.நடராஜன் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் பகுதியில் நன்றி அறிவிப்பு பயணம் தொடங்கியது. நஞ்சேகவுண்டன்புதூர்,  உடையாம் பாளையம், சின்னவேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, அம்மன்நகர், சிவானந்தபுரம், வினாய காபுரம், சேரன்மாநகர், விசுவாசபுரம், வீரியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், அத் திக்குட்டை, நேருநகர், காளப்பட்டி உள்ளிட்ட எஸ்.எஸ்.குளம் ஒன்றியப்ப குதிகளில் நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.  நன்றி அறிவிப்பு சுற்றுப் பயணத் தில் வழியெங்கும் எம்பிக்கு பொது மக்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். பல்வேறு பகுதிகளில் வெடிவெடித்தும், தவில், நாயன வாத்தியங்கள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பைக் கூட்டணி கட்சியினர் அளித்தனர். ஏராளமான பெண்கள் பி.ஆர்.நடராஜன் எம்பி மற்றும் கூட் டணி கட்சிகளின் தலைவர்களுக்கு ஆரத்தி, வெற்றித் திலகமிட்டு வாழ்த்து களை தெரிவித்தனர்.  

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித் துப் பேசிய எம்பி பி.ஆர்.நடராஜன், அமைதிக்கான வேட்பாளர் என்கிற முழக்கத்தை முன்வைத்து இந்த தேர் தலை நாங்கள் சந்தித்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கசப்பான அனுபவத்தில் இருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வந்துள் ளோம். கோவை மக்கள் அமைதி, மன நிம்மதி வேண்டும் என்பதை யேற்று மாபெரும் வெற்றியை அளித் துள்ளீர்கள். இந்த பொறுப்போடு களத் தில் பணியாற்றுவேன். அதேநேரத்தில் கடந்த காலத்தில் செயல்பட்டதைப் போல மேலும் சிறப்பாகப் பணியாற்று வேன் என்றார்.  நன்றி அறிவிப்பு பயணத்தில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த் திக் எம்எல்ஏ, பகுதி கழக செயலாளர் பையாக்கவுண்டர், தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா.ஜெயக்குமார், மாநகர் செயலா ளர் கணபதி சிவக்குமார், வட்ட செய லாளர் நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மதிமுக பகுதி கழக செயலா ளர் விசுவராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங் கிரி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலா ளர் ஆர்.கோபால்,மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துவளவன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இந்த பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர். பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று திமுக எம்எல்ஏ கார்த்திக் பேசுகையில், எந்த நேரமும் எளிதில் சந்திக்கும் மார்க் சிஸ்ட் கட்சியின் மக்கள் ஊழியரை கோவை நாடாளுமன்ற தொகுதி வாக் காளர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார் கள். இன்று நாம் தேர்ந்தெடுத்துள்ள எம்பி நேற்றையதினம் சிங்காநல்லூர் பகுதி எஸ்ஏஎச்எஸ் காலனி பகுதி மக் களின் மேம்பால பிரச்சனைக்கான போராட்டத்தில் பங்கேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட் டார். இன்று நன்றி அறிவிப்பு பயணத் தில் பங்கேற்று இருக்கிறார். தென்னிந் தியாவின் மான்செஸ்டர் என்று சொல் லக்கூடிய நமது கோவை மாவட் டத்தை மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் மாவட்டத்தின் வளர்ச்சியை நாசப்படுத்தியுள்ளது. மாநகரத்தின் பல பகுதிகளில் அடிப் படை வசதிகளே இல்லாத சூழல் நிலவுகிறது.  

தற்போது குடிநீர் பஞ்சம்தலை விரித்தாடுகிறது. இந்நிலையில்தான் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத் திற்கு அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனத் திற்கு நமது கோவை மாநகரின் குடிநீர் விநியோகத்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்ப டும் அபாயம் உள்ளது. அனைத்து பகுதி மக்களின் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றிற்காக எந்நேரமும் நாங் கள் உழைப்போம் என்ற உறுதி யோடு நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.  சுற்றுப் பயணத்தில் கலைஞர் நகர் மக்கள் இப்பகுதியில் சமூகக்கூடம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை அளித்தனர். இதனையேற்ற பி.ஆர்.நடராஜன் நடப்பு நிதியாண்டிலேயே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உடனடி யாகச் சமூக்கூடம் அமைப்பதற்கு உத்த ரவிடப்படும் என்கிற வாக்குறுதியை அப்பகுதி மக்களின் எழுச்சிமிகு கர வொலிக்கிடையில் அறிவித்தார்.