tamilnadu

img

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டுக!

ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம், அக்.6- விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர் தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்திருந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்  குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித் தார்.  அப்போது, உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தாளத்திற்கோ இரு பக்கமும் இடி என்பதை போல் தமிழக மக்கள் மத்திய,  மாநில அரசுகளால் இரண்டு பக்கமும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் என்றார். நாடு கடுமையான பொருளாதார நெருக் கடியை சந்திக்கிறது. 70 ஆண்டு கண்டிராத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையை  இழந்துள்ளனர். கோவை, திருப்பூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுகுறு தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையிலும் மத்திய பாஜக அரசை மாநில அரசு ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி னார். இத்தகைய பின்னணியில் நடை பெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் திமுக மற் றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து அதி முக, பாஜக கூட்டணிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வாக்காளர் களுக்கு வேண்டுகோள்விடுத்தார். மேலும், “ஜெர்மனியில் உள்ளது போல் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது. ஆனால் சில அரசியல் கட்சிகளும், தேர் தல் ஆணையமும் ஒத்துள்கொள்ள வில்லை என்றும் மக்களவைத் தேர்த லில் செலவு செய்த ரூ.10 கோடிக்கு தேர் தல் ஆணையத்திடம் கணக்கு கொடுத்து  உள்ளோம், அதனை இணையத்தில் வெளியிடவுள்ளனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை என்றும் ஜி.ராமகிருஷ் ணன் தெரிவித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன், எஸ்.கீதா, ஜி.ராஜேந் திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;