குண்டடத்தில் விவசாயி காரில் இருந்து ரூ.2லட்சத்து 10 ஆயிரம் திருட்டு
தாராபுரம், ஜூலை 12- தாராபுரம் அடுத்த குண்டடத்தில் விவ சாயி காரில் இருந்து ரூ.2லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றார். குண்டடம் அடுத்துள்ள ஜோத்தியம் பட்டியை சேர்ந்தவர் விவசாயி சண்முக சுந்தரம் (45). இவர் குண்டடம் தாராபுரம் சாலையில் உள்ள கனரா வங்கியில் வியாழ னன்று மதியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் வைத்தார். காரை குண்டடம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள விஏஓ அலுவலகத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது கார் கதவு திறக்கப்பட்டு காரில் ரொக்கப்பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முக சுந்தரம் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குண்டடம் காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப் படையில் மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விதை சுத்திகரிப்பு நிலையங்களில் உதவி இயக்குநர் ஆய்வு
தாராபுரம், ஜூலை 12- தாராபுரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்களில் உதவி இயக்குநர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூரில் புதிதாக விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் உதயமானது. விதைச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விதை சுத்தி நிலையங்களில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது விதைச்சான்று நடை முறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா எனவும், விதைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்தார். எதிர்வரும் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், நெல் சாகுபடி மேற் கொள்ள ஏதுவாக நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களை காலதாமதமின்றி தொடர் சான்று பணி மேற்கொண்டு விதை விநியோகத்திற்கு தயார் நிலையில் வைக்கும்படி அனைத்து விதைச்சான்று அலுவலர்களுக்கும் விதை சுத்தி நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது விதை சுத்தி நிலையங்களில் இருப்பில் உள்ள வயல் மட்ட விதைகள் சரியாக பராமரிக்கப் படுகிறதா என்பதையும், விதை குவியல்கள் மற்றும் சான்றட்டை பொருத்திய விதைக்குவியல்கள், மிதவை பரிசோதனை மற்றும் எடையளவு ஆகியவற்றை பரி சோதித்து விதைத்தரங்களை உறுதி செய்தார். விதை சுத்தி நிலையங்களில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடு களை ஆய்வு செய்தார்.
திருப்பூரில் போலி வழக்குரைஞர் கைது
திருப்பூர், ஜூலை 12- திருப்பூரில் போலி வழக் குரைஞரை காவல்துறை யினர் வியாழனன்று கைது செய்தனர். திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கு ரைஞர் நடமாடிக் கொண்டி ருப்பதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று சந்தேகத் துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத் தினர். இதில், அவர் சென்னை, தண்டையார்பேட்டை, ரங்கன் வீதியைச் சேர்ந்த ஆர்.செல்வராஜ் (49) என்பதும், அவர் போலி வழக்குரைஞர் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செல்வராஜை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து போலி அடையாள அட்டை யை பறிமுதல் செய்தனர்.