tamilnadu

img

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், பிப்.28- தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் தமிழ் ஆட்சி  மொழிச் சட்ட வாரம் விழிப் புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தலைமையில் நடை பெற்றது.  நாமக்கல் தெற்கு, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி காவல்  கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னி லையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை யேற்று தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.  இப்பேரணியானது நாமக்கல் தெற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மோகனூர் சாலை, குளக்கரைத்திடல், நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக  நாமக்கல் தெற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. இப்பேரணியில்,  நாமக்கல் தெற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுரபி மேல்நிலைப்பள்ளி களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பதாகை களை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்(பொ) ம.சி.தியாக ராஜன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.