மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை, செப். 27- விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வெள்ளியன்று ஒழுங்கு முறை விற்பணைக்கூட வளாகத் தில் நடைபெற்றது. இந்த கூட் டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்திட(சந்தைப் படுத்த) மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகளின் காப்பீட்டு திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெற முடியும். எனவே காப்பீட்டு திட்டத்தில் பங்கு பெற 18 வயது முதல் 60 வயதுள்ளவர்களைச் சேர்க்க வேண்டும். தற்போது விவசாயி களை பாதிக்கும் வகையில் உள்ள மரபணு மாற்றம் செய்த விதைகளை விற்பனை செய் வதை அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஐம்பது ஆண் டுகளுக்கு மேல் நிறைவேற்றாமல் உள்ள ஆணைமலை- நல்லாறு அணை திட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக, இந்த கூட்டத் திற்கு பஞ்சலிங்க அருவி கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தின் தலைவர் உடுக்கம்பாளையம் எஸ்.பரம சிவம் தலைமை தாங்கினார். வேளாண்மை துறையின் சார்பில் உதவி செயற்பொறியாளர் சுப்பி ரமணியம், பிரவீனா, அறிவுமதி சரவணன், சந்தானகிருஷ்ணன் தோட்டக்கலை துறையின் சார் பாக வடிவேல், கோபிநாத், மோக னரம்யா மற்றும் உழவர் உற்பத் தியாளர் நிறுவனத்தின் இயக்கு னர்கள் உள்ளிட்ட திரளான விவ சாயிகள் கலந்து கொண்டனர்.