பொள்ளாச்சி, செப்.10- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் 7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனு மதித்துள்ளது. சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைய டுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 7 நாட்களாக அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நீரின் அளவு சீரானதும் செவ்வாயன்று குரங்கு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர்.