tamilnadu

img

காந்திபுரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

கோவை, ஜூலை 13- போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களை கட்டுப் படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் கோவை மாநகரத்தின் பல்வேறு மையப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.  மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரணின் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரத்தில் துவங்கி பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை என கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் அமைக்கும் பணியை காவல்துறையினர் குடியிருப்பு சங்கங்கள்  மற்றும் சமூக அமைப்புகள் உதவியுடன் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது சி-1 காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்கள் அமைக்கப்பட் டுள்ளது.  குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையங்கள், சக்தி சாலை, ஆவாராம்பாளையம் சாலை, ஜி பி சிக் னல், 100 அடி சாலை எனமக்கள் நடமாடும் பல்வேறு பகுதிகளில் எளிதில் அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண் காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவும், புனரமைக்கப்பட்ட சி-1 காட்டூர்  காவல் உதவி மையம் திறப்பு விழாவும் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்றது. இந்த துவக்கவிழா நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகர காவல் துணை  ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையாளர் எழிலரசு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் மற்றும் கண்காணிப்பு கேமராக் கள் அமைப்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்ட காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவா மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.