tamilnadu

கோவையில் அடுத்தடுத்து கோவில்கள் தீ வைப்பு

கோவை ஜூலை 18 – கோவையில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவில், நல்லாம்பாளை யத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மற்றும் ரயில்நிலையம் முன்பு உள்ள ஒரு கோவில் என அடுத்தடுத்து மூன்று கோவில் களுக்கு வெள்ளியன்று இரவு மர்ம நபர் களால் தீ வைக்கப்பட்டது.  

முன்னதாக கோவை டவுன்ஹால் அடுத்த ஐந்து முக்குப் பகுதியில் உள்ள  மாகாளியம்மன் கோவிலிற்கு வெள்ளி யன்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் ஒருவர், கோயில் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த சுவரொட்டிகளை கிழித்து, டயர்களில் தீப்பற்ற வைத்த சிசிடிவி காட்சிகள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உக்கடம் காவல் துறையினர், கோவிலில் டயர்களை போட்டு  தீயிட்டுக் கொளுத்திய மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.