tamilnadu

img

முக்கிய நிறுத்தங்களைத் தவிர்க்கும் புறநகர்ப் பேருந்துகள்

அவிநாசி, செப். 20- கருமத்தம்பட்டியில் பேருந்து கள் நின்று செல்வதை அரசு உறு திப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  கோவையில் இருந்து திருப்பூருக்கு செல்ல கடந்த இரு ஆண்டுகளுக்கு  முன் புறவழிச்சாலை அமைக்கப்பட் டதை அடுத்து கருமத்தம்பட்டி வழி யாக வந்து சென்ற அரசு மற்றும் தனி யார் பேருந்துகள் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று வந்தது. இதையடுத்து பலமுறை அப்பகுதி மக்கள்  சாலை மறியல் உள்ளிட்ட  போராட்டங்களில் ஈடுபட்டு வந்த னர். இதையடுத்து மோட்டார்  வாகன போக்குவரத்து அலுவலர் கள் உத்தரவின் பேரில், பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்று கொண் டிருந்தன. இந்நிலையில், கோவையில் இருந்து ஈரோடு மற்றும் சேலம் செல் லும் அரசு மற்றும் தனியார் பேருந்து கள் மீண்டும் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தைப் புறக்கணித்து வருகின் றன. இதற்கிடையில், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் மற்றும் பல்ல டம் பழனிசாமி ஆகியோர் வெள்ளி யன்று மதியம் கோவையிலிருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி யுள்ளார்.  ஆனால் பேருந்து நடத்துநர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத் தத்தில்  நிற்காது. புறவழிச்சாலையாக செல்லும் என்று கூறியுள்ளார். இத னையடுத்து மோட்டார் வாகனச்  சட்டப்படி அரசு பேருந்து வழித்தட பட்டியலுடன்  பேருந்து எங்கு செல் கிறது என்று  ஒட்டியிருக்க வேண்டும்.  ஆனால், இப்பேருந்தில் ஒட்ட வில்லை என குமார் கேள்வி எழுப் பியுள்ளார். இதன்பிறகே கருமத் தம்பட்டியில் பேருந்து நிற்கும் என நடத்துநர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் கூறுகை யில். தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து வழியோர கிராமப் பகுதிக்குள் பேருந்துகள் வரா மல் நேராக செல்கின்றன. இதனால் கிராமப் பகுதி மக்கள் போக்குவரத் திற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக் கப்படுகின்றனர். மோட்டார் வாகன விதிப்படி, வழித்தட வரைபடம், கட்டண விபர பட்டியல் பயணிகள் பார்வைக்கு பெருமளவு பேருந்துகளில் இல்லை.  மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி பயணிகளுக்கு தேவை யான தகவல்களுடன் பொதுப் போக்குவரத்து ஆன அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். வழியோர கிராமப் பகுதிகளில் கட்டாயம் பேருந்துகள் நின்று செல்வதை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.