tamilnadu

img

கீழடியில் கிடைத்தது ஒரு பெரிய உயிரினத்தின் வால் முனை அளவு மட்டுமே - சு.வெங்கடேசன்

கீழடியில் இதுவரை கிடைத்த பொருட்கள், குறிப்புகள் வால் முனை அளவு மட்டுமே அடுத்தடுத்த ஆய்வுகளில் தமிழ் வரலாற்றின் தலை,முகம், உடல் ஆகியவை கிடைக்கும் என எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன்  நம்பிக்கை தெரிவித்தார்.

கோவையில்  நன்னெறிக் கழகம் சார்பில் கீழடி வரலாற்றுப்பார்வை என்கிற சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் இயகோகா.என்.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயலாளர் பி.ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சில் பங்கேற்று கீழடியின் ஆய்வுகள் குறித்தும், அதன் பயணம் குறித்தும் சு.வெங்கடேசன் எம்பி சிறப்புரையாற்றினார்.  முன்னதாக அவர் பேசுகையில்,  கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், அந்நிலம் மாற்று பயன்பாட்டுக்கு மாறாமல் தடுப்பதற்கும்  கீழடி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். தேசிய அளவில் சிந்து சமவெளி நாகரீகம் குறித்து பேசியதற்குப்பிறகு கீழடி நாகரிகம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கீழடி பண்டைய காலத்தின் மரபை கடத்தி இன்றைய காலகட்டத்திற்கு பல தகவலை கொண்டு சேர்க்கும். கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வு பெரிய உயிரினத்தின் வால் முனை மட்டுமே எனவும், அடுத்தடுத்த ஆய்வுகளில் தமிழ் வரலாற்றின் உடல், தலை, முகம் கிடைக்கும். ஆரம்பத்தில் கீழடி அகழ்வாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதும், ஸ்ரீராமன் 80 சதவிகித நிதியை பயன்படுத்தாததும் அரசியல் பின்புலமே காரணம். கீழடி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்து, தமிழகத்தில் தொல்லியல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.