நாமக்கல், ஜூலை 24- நாமக்கல் அருகே போதுப்பட் டியில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் பள்ளி கட்டிடம் கட்டாததால் இட நெருக்கடியில் மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், போதுப் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் காவேட்டிப்பட்டி, போதுப் பட்டி, லக்காபாளையம், அண்ணா நகர், குப்பம்பாளையம், ரெக்கா பாளையம் பகுதியைச் சேர்ந்த 119 மாணவர்கள் பயின்று வருகின்றன. இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான கட்டிட வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலையில் கடந்த 5 வருடங் களுக்கு முன்பு போதுப்பட்டியில் 1.31 பரப்பளவில் உயர்நிலைப்பள்ளி கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. இடம் ஒதுக்கியும் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலேயே இயங்கி வருகின்றன. மேலும், இப்பள்ளியின் இரண்டு வகுப்பறை பள்ளியின் எதிரே உள் ளது. இந்த வகுப்பறையில் உயர் நிலைப்பள்ளியின் 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்பு இயங்கி வருகின்றன. இந்த வகுப்பறைக்கு மின் வசதி இல் லாததால் மாணவர்கள் புழுக்கத்தில் அமர முடியாமலும், மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட நபார்டு வங்கி மூலம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டும் கட்டிடம் கட்டப்பட வில்லை. இதனால் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் வசதி இல் லாமல் விளையாடும் நிலையே இல்லை என மாணவர்களும், பெற் றோர்களும் கூறுகின்றன. இது குறித்து போதுப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது, போதுப்பட்டியில் சுற்றுப்புற மாண வர்கள் பயில ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர் களுக்கே தேவையான அடிப்படை வசதி இல்லாமலும், இட நெருக்க டியில் பள்ளி இயங்கி வருகிறது. இதனை கல்வித்துறை கண்டு கொள்ளாமல் உள்ளன. மேலும், உயர் நிலைப்பள்ளி கட்ட இடம், நிதி ஒதுக்கப்பட்டும் பள்ளிக் கட்டிடம் கட்ட கல்வித்துறை அக் கறை செலுத்தவில்லை. உயர்நிலைப் பள்ளி கட்டினால் மாணவர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் மாணவர்கள் கல்வி பயில வசதியாக இருக்கும் என்றார்.