tamilnadu

img

புதிய கல்விக்கொள்கை வரைவு நகல் எரிப்பு மத்திய அரசிற்கு எதிராக மாணவர்கள் ஆவேசம்

நாமக்கல், ஜூன் 25- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரித்து மாணவர்கள் ஆவேச போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘’வரைவு தேசிய கல்வி கொள்கை அறிக்கை 2019’’ என்ற வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையானது கல்வியை கார்ப்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்க்கும் வகை யிலும், கல்வியில் காவிமயத்தை புகுத்திடும் வகையிலும் அமைந் துள்ளது. மேலும், மாநிலங்களின் உரிமைகளையும், மொழி உரி மையையும், கல்வி பெறும் உரிமை யையும் பறிக்கும் பல்வேறு அம் சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இதனை கண்டித்து இந் திய மாணவர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள கல்வி வளா கங்களில் செவ்வாயன்று இக்கல் விக் கொள்கையின் நகல் அறிக் கையை எரித்து எதிர்ப்பு தெரிவித் திட அறைகூவல் விடுத்திருந்தது.  

இதன்ஒருபகுதியாக, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல் லூரியில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து புதிய கல்வி கொள் கையின் நகலை எரித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ் வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.தேன்மொழி, துணை நிர்வாகி கோபால், அருண், அரவிந்த், செல்வா, ஹரிஹரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இதேபோல், நாமகிரிப்பேட்டை  ஒன்றியம்  தொப்பபட்டி  அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் வரைவுக் கல்வி கொள்கை அறிக் கையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மா.தேன்மொழி, பெ.கோபால் மற்றும் சஞ்சய், கௌதம், லோக குமார், முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.