tamilnadu

img

17 பேர் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 5 – மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர்களைக் கைது  செய்ய வலியுறுத்தியும், நீதி கேட்டுப் போராடியோர் மீது  காவல் துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், பொய்  வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தியும்  இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்கக் கல்லூரி கிளை செயலாளர் கல்கிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது,  மாவட்டத் தலைவர் பிரவீன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர்  தனசேகர், துளசி மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.