நாமக்கல், ஜூன் 24- நாமக்கல் அருகே வடவத்தூர், ஜம்பு மடை பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத் தித்தரக் கோரி அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி யில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். வடவத்தூர், ஜம்புமடை ஆகிய கிரா மத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஜம்புமடை, வடவத்தூரிலி ருந்து காலை நேரத்தில் மட்டும் பேருந்து வசதி உள்ளது. மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் நீண்ட நேரம் கழித்து மாணவிகள் இரவு வீடு திரும்பு கின்றனர். தற்போது, நாமக்கல்லில் இருந்து ஜம்பு மடை வழியாக அரசு பேருந்து மாலை நேரத்தில் 4.15 மணிக்கு இயக்கப்படுகிறது. இப்பள்ளி மாலை 4.30 மணிக்கும் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது மாலை 5 மணிக்கு விடப்படுகிறது. கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த குமரகுருபரனிடம் மனு அளித்தனர். பின்னர் பள்ளி முடியும் நேரத்தில் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. பின்னர் சில மாதங்களில் அதே நிலையில் 4.15 மணிக்கு சென்று வருகிறது. மீண்டும் பழைய நிலையை தொடர்ந்து நீடிப்பதால் மாணவர்கள் உரிய நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியாமல் இரவு 7 மணி அளவில் தனியார் வாகனத்தில் கட்டணம் செலுத்தி வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாலை 5.30 மணிக்கு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று அப்பள்ளி மாணவிகள், பெற்றோர் களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.